நன்கொடை
பிறவிப்பயனும், வைணவ பெரியோர்கள் , பிறவிப்புண்ணியமும் கிடைத்திட அருள் செய்வது விஷ்ணு ஆலயங்களை எழுப்புவது, பழைய பெருமாள் ஆலயங்களுக்குத் திருப்பணி புதுப்பித்தல் போன்றசெயல்களாகும், அவ்வாறே நம் தென் பாரதத்தையும் மற்றும் சில கடல் கடந்த நாட்டையும் ஆண்ட மன்னர்கள் மற்றும் வைணவ பெரியோர்கள் , தங்களது தெய்வமான பெருமாளுக்கு கோயில் எழுப்புவதைத்தனது குலத்தொழிலாகக் கொண்டு , ஊருக்கு ஒரு கோயில் எனத் தனது நாடு முழுவதும் பெருமாள் ஆலயங்கள் எழுப்பித் தனது குலப்பெருமையையும், நீங்காப் புகழையும் கொண்டு இறைவன் புண்ணிய பிறவிப்பயன் அடைந்தார்கள். அவ்வாறே நாமும் நம் பிறவிப் பயனும் குலப் பெருமையும், செய்த பாவங்களில் இருந்து விடுபட பெருமாள் ஆலயங்களை எழுப்பி நமது பிறவிப் பயனை அடைவேண்டும். அவ்வண்ணம் நாம் எல்லாம் மன்னர்கள் அல்லர் , அல்லது ஆட்சி செய்யும் மனிதர்களும் அல்லர் , பின் நாம் எப்படி விஷ்ணு ஆலயங்களை எழுப்பி இத்தகைய பயனை அடைவது? இவற்றிற்கான விடையானது இறைஅருளால் விஷ்ணு ஆலயம் கட்டப்படுதல் அல்லது இருக்கும் பழைய பெருமாள் ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தல் போன்ற செயல்களைச் செய்யும் அறநிலையத்துறை அரசுடன் நம்மால் இயன்ற நிதி உதவி அளித்தாலே அவை விஷ்ணு ஆலயம் கட்டும் அல்லது செய்யும் திருபணிக்குச் சென்றடையும்.
இத்தகைய பலரின் இயன்ற நிதி உதவியுடன் அரசும் சேர்ந்து செய்யும் திருப்பணியானது , நிதி ஈகின்ற அனைவருக்கும் பெருமாள் ஆலய திருப்பணி அல்லது விஷ்ணு ஆலய உருவாக்கும் புண்ணியம் தாமாகவே சென்றடையும்.
திருப்பணிக்கு நன்கொடையளிப்பவர்கள் கீழ்க் கண்ட விபரத்திற்குக் காசோலையாகவே, செக் மூலமாகவோ , வங்கி பணபரிமாற்றம் மூலமாகவோ அளிக்கலாம்.