நன்கொடை

பிறவிப்பயனும், வைணவ பெரியோர்கள் , பிறவிப்புண்ணியமும் கிடைத்திட அருள் செய்வது விஷ்ணு ஆலயங்களை எழுப்புவது, பழைய பெருமாள் ஆலயங்களுக்குத் திருப்பணி புதுப்பித்தல் போன்றசெயல்களாகும், அவ்வாறே நம் தென் பாரதத்தையும் மற்றும் சில கடல் கடந்த நாட்டையும் ஆண்ட மன்னர்கள் மற்றும் வைணவ பெரியோர்கள் , தங்களது தெய்வமான பெருமாளுக்கு கோயில் எழுப்புவதைத்தனது குலத்தொழிலாகக் கொண்டு , ஊருக்கு ஒரு கோயில் எனத் தனது நாடு முழுவதும் பெருமாள் ஆலயங்கள் எழுப்பித் தனது குலப்பெருமையையும், நீங்காப் புகழையும் கொண்டு இறைவன் புண்ணிய பிறவிப்பயன் அடைந்தார்கள். அவ்வாறே நாமும் நம் பிறவிப் பயனும் குலப் பெருமையும், செய்த பாவங்களில் இருந்து விடுபட பெருமாள் ஆலயங்களை எழுப்பி நமது பிறவிப் பயனை அடைவேண்டும். அவ்வண்ணம் நாம் எல்லாம் மன்னர்கள் அல்லர் , அல்லது ஆட்சி செய்யும் மனிதர்களும் அல்லர் , பின் நாம் எப்படி விஷ்ணு ஆலயங்களை எழுப்பி இத்தகைய பயனை அடைவது? இவற்றிற்கான விடையானது இறைஅருளால் விஷ்ணு ஆலயம் கட்டப்படுதல் அல்லது இருக்கும் பழைய பெருமாள் ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தல் போன்ற செயல்களைச் செய்யும் அறநிலையத்துறை அரசுடன் நம்மால் இயன்ற நிதி உதவி அளித்தாலே அவை விஷ்ணு ஆலயம் கட்டும் அல்லது செய்யும் திருபணிக்குச் சென்றடையும்.

இத்தகைய பலரின் இயன்ற நிதி உதவியுடன் அரசும் சேர்ந்து செய்யும் திருப்பணியானது , நிதி ஈகின்ற அனைவருக்கும் பெருமாள் ஆலய திருப்பணி அல்லது விஷ்ணு ஆலய உருவாக்கும் புண்ணியம் தாமாகவே சென்றடையும்.

  • நன்றி
  • சிறப்பு அலுவலர்,
  • அருள்மிகு தென்கலை ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில்

திருப்பணிக்கு நன்கொடையளிப்பவர்கள் கீழ்க் கண்ட விபரத்திற்குக் காசோலையாகவே, செக் மூலமாகவோ , வங்கி பணபரிமாற்றம் மூலமாகவோ அளிக்கலாம்.

  • வரைவுகாசோலை / செக்
  • திருகோயில் திருப்பணி
  • ஸ்ரீ தென்கலை ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில்
  • முத்தியால்பேட்டை
  • வங்கி கணக்கு எண் (A/C No ) : 0927101000683
  • வங்கி பெயர் : கனராவங்கி,(CANARA BANK)
  • IFSC Code : CNRB0000927.
  • முத்தியால்பேட்டை கிளை,
  • முத்தியால்பேட்டை,
  • புதுச்சேரி
  • வங்கி பணபரிமாற்றம்
  • CANARA BANK
  • A/C NO :0927101000683
  • IFSC CODE : CNRB0000927
  • நன்றி:
  • சிறப்பு அலுவலர் மற்றும் நிர்வாக அலுவலர்,
  • அருள்மிகு தென்கலை ஸ்ரீநினிவாசப் பெருமாள் திருக்கோயில்
  • முத்தியால்பேட்டை
  • புதுச்சேரி

தென்கலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்

  • அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா
  • நிகரில் புகழாய் உலக மூன்றுடையாய் என்னை ஆன்வானே
  • நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
  • புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!
  • ஆலமாமரத்தின் இலைமேல் ஒருபாலகனாய்
  • ஞாலமேழமுண்டான் அரங்கத்தரவின்ணையான்
  • கோல மாமணியாரமும் முத்துத்தாம்மும் முடிவில்லைதோரெழில்
  • நீலமேனி ஐயோ நிறை கொண்டதென் நெஞ்சினையே!
  • சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன்கீண்டுகந்த
  • சங்கம் இடத்தானை தழலாழி வல்த்தானை
  • செங்கமலத்து அயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
  • அங்கமலக்கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே!