தலமகிமை
ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலின் தலமகிமை
இத்திருத்தலத்தில் மூலவர் ஸ்ரீநிவாசப் பெருமாள், தாயர் ஸ்ரீஅலர்மேல்மங்கைத்தாயார், ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீலட்சுமி நரஸிம்மர், ஸ்ரீஆஞ்சனேயர் மற்றும் ஸ்ரீமந் மணவாள மாமுனிகள் க்கான சன்னதிகள் உள்ளன.
ஸ்ரீஸ்ரீநிவாசப்பெருமாள்
திருவுக்கும் திருவாகிய செல்வத் திருமால், கலெள வேங்கடநாயக: என்றபடி கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய், தனக்கு ஒப்பரிலாத தானொருவனாய் நிற்க்கும் நிகரில்லாத தெய்வமாம் ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள், நின்றான் நெடியாய் என்ற அழகிய தோற்றத்துடம், கருணையே வடிவமாய் காட்சிதருகின்றார்.
ஸ்ரீஅலர்மேல்மங்கைத்தாயார் :
எம்பெருமானை அடைவதற்கும் , அவனது இன்னருளை பெறுவதற்கும் முன்னின்று அருள் செய்பவளாம், பதும முகமும், கரமும், பாதமும் கொண்டு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தருபவளாய் தனிச்சன்னதியில், அலர்மேல்மங்கைத்தாயார் அருள்கிறாள்.
ஸ்ரீரங்கநாதர் :
பூலோக வைகுண்டமாம், திருவரங்கச் செல்வன், பாலன் தனதுருவாய், அழகிய அரவணையில், பாலசயனரூபத்துடன், சேவை தருகிறார்.
ஸ்ரீலட்சுமி நரஸிம்மர் :
உலக தர்மத்தைக்காக்க, இரணியனை அழித்து ,பிரகலாதனை வேண்டுகோளை ஏற்று, திருமகளுடன் அமர்ந்து காட்சிநல்கும் நரஸிம்மர், நம் அச்சங்களை எல்லாம் நீக்கிக் காக்கும் வண்ணம், நெடிய உருவான ஆளரியாய் தரிசனம் தருகிறார்.
ஸ்ரீஆஞ்சனேயர்:
சிறியதிருவடி என்றழைக்கப்படும் , இருகரம் கூப்பியவண்ணம் பக்த ஹனுமானாக, நவகோள் மகிழ்ந்து நன்மையளிக்கும் வண்ணம் காட்சிதருகிறார்.
ஸ்ரீமந் மணவாள மாமுனிகள்
ஈட்டுத் தமிழை நமக்கு உரைத்து, வைணவத்தை நிலைநாட்டிய, ஆசார்ய ஸார்வபெளமராகிய மணவாள மாமுனிகள், கம்பீரமான தோற்றத்துடன் பெரிய ஜீயராகக் காட்சித்தருகிறார்.